தமிழகம் முழுவதும் ஒரு வாரம் பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் போராட்டம்!
தமிழக தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
போராட்டம்:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளாலும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களுக்கு கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக தினசரி வகுப்புகள் நடைபெற்று வந்தது.மேலும் அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு சார்பாக கல்வி தொலைக்காட்சியும் கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் ஆன்லைன் கல்வி பயின்று வரும் வேளையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை கேட்டு பெற்றோர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக புகார்கள் எழுந்தது.
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மே மாதம் விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியீடு!
ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர. இந்த வேளையில் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முற்பட்டனர். இது குறித்து பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கத்தினர் பற்றி புகார்களும் தெரிவித்து வந்தனர்.
இதற்கு அரசு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தெரிவித்தது. தற்போது 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. தற்போது நேரடி வகுப்புகள் என்பதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.