நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை – இணையத்தில் வெளியீடு!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் விளக்கம்!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்கலாம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான, தனிச்சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – வெளியான தகவல்!
நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட பின் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் சேர்க்கை சதவிகிதம் 56.02லிருந்து 69.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44 சதவிகிதத்தில் இருந்து 1.7 சதவீதம் ஆக குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில காலம் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் தரம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.