தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
நகை கடன் தள்ளுபடி :
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த வருடத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த 9 மாவட்டங்களிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள் – வெளியான தகவல்!
இந்த நிலையில் செய்தியாளரை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் தேர்தல் ஆணையம் தங்கள் சவுகரியத்திற்காக இரண்டு கட்டமாக தேர்தலை நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தல் எந்த முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் நிச்சயம் நடக்கும். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
தேசிய பாதுகாப்பு படையில் (NDA) பெண்களும் சேர்ப்பு – 2022 மே நுழைவுத்தேர்வு!
அதில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் திருட்டுத்தனமாக கடன் பெற்றோருக்கு சலுகை கிடைக்க கூடாது என்பதே அரசின் நோக்கமாகும். 5 சவரனுக்கு கீழ் நகை கடன் தள்ளுபடி வழங்க அரசு 6000 கோடி ஒதுக்கியுள்ளது. கிலோ கணக்கில் நகை கடன் மோசடி நடைபெற்றுள்ளது. இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.