மீண்டும் செப்.04 ல் NEET தேர்வு அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் கேரளாவில் சோதனை சர்ச்சையில் மாட்டிய மாணவிகளுக்கு வருகிற 4ம் தேதி மறு தேர்வு நடத்த உள்ளதாக நீட் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கு நீட் தேர்வு அவசியமானதாக தற்போது பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நீட் தேர்வு நடைபெறாமல் இருந்தது. மேலும் நடப்பு ஆண்டில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் தற்போது அனைத்து வகையான போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வர்கள் தேர்வு எழுத செல்லும் முன்பு மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
இதையடுத்து சோதனையின் போது மாணவிகளுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்த அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாணவிகள் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சோதனை சர்ச்சை விவகாரத்தில், கொல்லத்தில் 6 இடங்களில் மாணவிகளுக்கு மட்டும் செப்டம்பர் 4ல் மீண்டும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் 7ம் தேதி நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கேரளாவில் 6 இடங்களில் மறு தேர்வு நடைபெறவுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்