தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்கள் தென்மேற்கு பருவமழை காலங்கள் ஆகும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. குறிப்பாக கேரளாவில் கடந்த மே மாதம் முதல் பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் ஓரிரு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருவதால் ஆற்று ஓரம் தங்கி இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாருடன் வாக்காளர் எண் இணைக்க புதிய வழிமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்