ஆப்கன் குடிமக்களை துப்பாக்கியால் சுட வேண்டாம், அதற்கு மாற்றாக..! தாலிபான்கள் புதிய நடவடிக்கை!
ஆப்கானிஸ்தானில் தற்போது குடிமக்களை சுடக்கூடாது எனவும் மக்களை அச்சுறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துங்கள் எனவும் தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
துப்பாக்கிச்சூடு:
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தாலிபான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடினார். நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமைதி மறைந்த காரணமாக மக்கள் தங்கள் வாழ்வை காத்துக்கொள்ள தப்பி ஓடுகின்றனர். பலர் விமானங்களின் டயர்களிலும், விமான நிலைய கூட நெரிசலில் சிக்கி இறந்து வரும் நிலையில் பலர் துப்பாக்கி சூட்டில் இறந்து வருகின்றனர்.
லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிப்பில் ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் தற்போது வரை கைப்பற்றாத இடங்களை கைப்பற்றுவதற்காக வன்முறை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நங்காகார் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் ஆப்கானிஸ்தான் குடிமக்களை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்த வேண்டாம் என்று தங்கள் அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மக்களை அச்சுறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தலாம் என கூறப்பட்டு உள்ளது.