தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2021 – 2022ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இறப்பிற்கு பின்னர்..? கசிந்த பிரிட்டிஷ் அரசின் திட்டம்!
தொழிற்படிப்பு மற்றும் பிற படிப்புகளில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகை பெற நிபந்தனைகள் உள்ளது அதன்படி அவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பயிலும் கல்லூரிகளிலேயே விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து கல்லூரி அலுவலகத்திலேயே வழங்க வேண்டும்.
மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் விளக்கம்!
ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அதை புதுப்பிப்பு செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் புதுப்பிப்பு செய்பவர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் விண்ணப்பத்தினை நவம்பர் 5ம் தேதிக்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் ஆன்லைன் மூலமாக டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.