மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் விளக்கம்!
கேரளாவில் முழு ஊரடங்கிற்கு சாத்தியமில்லை என்று முதல்வர் பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதலை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் தொற்று அதிகம் உள்ளது. அதனால் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருந்து வருகிறது. பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும் கொரோனா குறையவில்லை. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நல்லாசிரியர் விருது 2021 – கோவையில் 13 ஆசிரியர்கள் தேர்வு!
கேரளாவில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் திருநாள் நடப்பு ஆண்டு கொரோனா பரவும் அச்சத்தால் பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது வரை அமலில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தொற்று மென்மேலும் அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு தடை நீக்கம் – பிலிப்பைன்ஸ் அரசு!
இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன், அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் பிரனாயி விஜயன் மீண்டும் முழு ஊரடங்கிற்கு சாத்தியமில்லை என்று கூறினார். தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் 2 வாரங்களுக்குள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.