தமிழகத்தில் காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை – விண்ணப்பப்பதிவு தொடக்கம்!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி அடிகள் குறித்து படிக்கும் காந்திய கல்வி பட்டய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
மாணவர் சேர்க்கை
மதுரை மாவட்டத்தில் காந்தி அடிகள் நினைவு அருங்காட்சியத்தில் காந்தி குறித்து முழுமையாக படிக்கும் வகையில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காந்திய கல்வி பட்டய படிப்பு நடைபெறுகிறது. இந்த காந்தி கல்வி பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய படிப்பு, சம உரையாடல், கல்வி பட்டய படிப்பு, யோகா பட்டய படிப்பு போன்ற படிப்புகள் இருக்கும். இந்த படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்.
நாளை (ஜூலை.19) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
அது மட்டுமில்லாமல் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் கல்வி முதுநிலை பட்டய படிப்பு யோகா, முதுநிலை பட்டய படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்பு மூலம் காந்தியடிகள் பற்றியும் காந்தியடிகள் அகிம்சை பற்றியும் ஒருவன் வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது எல்லாம் தெரிந்து கொள்ளலாம். வாரத்தில் சனிக்கிழமை மட்டும் காலையில் பட்டய படிப்பிற்கான வகுப்புகளும், மாலை நேரத்தில் முதுநிலை பட்டய படிப்பிற்கான வகுப்புகளும் நடைபெறும். இந்த படிப்பிற்கான விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு 9995123091 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக தேவதாஸ் தெரிவித்துள்ளார்.