நாளை (ஜூலை.19) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 19 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
ஆண்டுதோறும் இஸ்லாமிய மக்களால் மொஹரம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மொஹரம் பண்டிகை இஸ்லாமிய புத்தாண்டாகவும் கருதப்படுகிறது. ரமலான் பண்டிகை போலவே இந்த மொஹரம் பண்டிகை சந்திரன் தோன்றுவதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்நாளில் இஸ்லாமிய மக்கள் புத்தாடைகள் அணிந்தும், ஏழை, எளிய மக்களுக்கு உணவு சமைத்து கொடுத்தும் பண்டிகையை சிறப்பிப்பர்.
UIDAI ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்த மொஹரம் பண்டிகையை முன்னிட்டு குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 19 ,20, 21, 22 ஆகிய 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.