கல்வியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – நாளை (அக்.06) முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு நாளை (அக்.6) முதல் தொடங்க உள்ளது. முதுநிலை கல்வியியல் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பபதிவு:
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அந்த வகையில் கடந்த 20ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. பின் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது.
மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக். 13ம் தேதி தொடங்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் பட்டபடிப்புக்கான (B.Ed) விண்ணப்பபதிவு ஆன்லைன் வாயிலாக கடந்த செப்டம்பர் 24ம் தேதி தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்த பி.எட்., பட்டப்படிப்பில் சேர விரும்புவர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Exams Daily Mobile App Download
இளங்கலை பட்டப்படிப்பை தொடர்ந்து தற்போது முதுநிலை கல்வியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் நாளை முதல் அக்டோபர் 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும். மேலும் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி முதல் தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்