மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தங்களின் செமஸ்டர் தேர்வுகளை அக்டோபர் 15ம் தேதியில் இருந்து தள்ளிவைக்குமாறு மும்பை பல்கலைக்கழகத்தை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பல்கலை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்:
கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலகையையே புரட்டி போட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மட்டுமே அப்போதைய நிலையில், உயிர்பலிகளை கட்டுப்படுத்தியது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியில் கல்வியை கற்று வந்தனர். வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியில் நடத்தப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கான தேர்வுகளும் ஆன்லைன் வழியிலேயே நடத்தப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதால், மாணவர்களுக்கு தேர்வுகள் வரும் சமயம் நேரடி எழுத்து தேர்வுகளை நடத்த ஆட்சேபனைகள் வந்த வண்ணம் இருந்தது. இதேபோல், தற்போது மும்பை பல்கலைகழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் 15ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வுகளை மட்டுமே எதிர்கொண்டதால் எழுத்துத்தேர்விற்கான பயிற்சிகள் வேண்டும்.
தொடர் தங்க உயர்வால் சாமானியர்கள் ஷாக் – இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
Exams Daily Mobile App Download
இதனால் செமஸ்டர் தேர்வுகளை அக்டோபர் 15ம் தேதியில் இருந்து தள்ளிவைக்குமாறு பல்கலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பல்கலை நிர்வாகம், இறுதி ஆண்டு மாணவர்களின் 5 வது செமஸ்டர் தேர்வுகளை தீபாவளி பண்டிகைக்கு பின்னர் நடத்த திட்டமிட்டுள்ளது. தீபாவளிக்கு பின்னர் தேர்வின் தேதிகள் mu.ac.in என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்