ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்!
அடல் பென்ஷன் என்கிற ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்கள் எவ்வளவு லாபம் பெறலாம் என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அடல் பென்ஷன்:
முதுமை காலத்தில் நல்ல ஒரு லாபத்தை பெறுவதற்காகவே அடல் பென்ஷன் யோஜனா என்கிற ஒரு திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களில் இருந்து 40 வயதுடையவர்கள் வரைக்கும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து டெபாசிட் செய்பவர்கள் 60 ஆண்டுகள் கழித்தே ஓய்வூதிய பணத்தை பெற முடியும். குறைந்தபட்சமாக பயனாளர்கள் ரூ.1,000லிருந்து டெபாசிட் செய்யலாம். மேலும், அதிகபட்சமாக ரூ.5,000 வரைக்கும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
TNPSC அரசு தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு – மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர விரும்புபவர்கள் சேமிப்பு கணக்கு, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் வைத்தே அக்கவுண்ட்டை உருவாக்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் எவ்வளவு அதிகமாக பணம் செலுத்துகிறோமோ அவ்வளவு பணம் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வூதியமாக கிடைக்கும். ஒருவர் 18 வயதிலேயே அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்துவிட்டால் ரூ. 5000 மாதாந்திர ஓய்வூதியத்தில் மாதம் ரூ.210 டெபாசிட் செய்தாலே போதுமானது. மாதத்திற்கு ரூ.210 டெபாசிட் செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.7 தான் டெபாசிட் செய்வதற்கு சமமாகும்.
Exams Daily Mobile App Download
தினமும் ரூ.7 டெபாசிட் செய்தாலே மாதம் ரூ.5000 வரைக்கும் ஓய்வூதியமாகப் பெறலாம். மேலும், மாதந்தோறும் ரூ.42 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.1000 வரைக்கும் ஓய்வூதியமாகப் பெறலாம். மாதந்தோறும் ரூ.84 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.2000 வரைக்கும் ஓய்வூதியமாகப் பெறலாம். மாதந்தோறும் ரூ.126 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.3000 வரைக்கும் ஓய்வூதியமாகப் பெறலாம். மாதந்தோறும் ரூ.168 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.4000 வரைக்கும் ஓய்வூதியமாகப் பெறலாம்.