நக்ஷத்திரா பற்றிய தவறான தகவல்களை பரப்பும் நடிகை ஸ்ரீ நிதி – வைரலாகும் வீடியோ! அதிர்ந்து போன ரசிகர்கள்!
நக்ஷத்திராவின் நெருங்கிய தோழியான ஸ்ரீ நிதி தற்போது நக்ஷத்திரா தவறான Relationship ல் மாட்டி கொண்டார் அவரை காப்பாற்றுங்கள் என கதறி அழும்படியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீ நிதி:
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக சினி துறையில் அறிமுகமானவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியல் மூலமாகவே எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்றார். தற்போது நக்ஷத்திரா குறித்து அவரது மிகவும் நெருங்கிய தோழியான ஸ்ரீநிதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நக்ஷத்திரா தவறான ஒருவரை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார். அவளை காப்பாற்றுங்கள் என யூடியூப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது நக்ஷத்திராவிற்கு சொல்லிக்கொள்ளும்படியாக குடும்பம் எதுவும் இல்லை. அம்மா மட்டும் தான் இருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய வீட்டில் தான் தங்கி இருக்கிறார். நக்ஷத்திராவிற்கு பெரிய பெரிய கார் வாங்க வேண்டும். பல லட்சங்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஆசை கிடையாது. தன் மீது பாசம் காட்டும் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நல்ல குடும்பத்தில் வாழ வேண்டும் இதுவே நக்ஷத்திராவின் கனவாக இருந்து வந்தது. பின்பு, ஒரு நாள் நான் தான் கூறினேன். இந்த பையன் உன்னை நன்றாக பார்த்து கொள்வார் அப்படி.
கோபி பற்றிய உண்மைகளை பாக்கியவிடம் கூறிய தனம் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
அதே போல நக்ஷத்திராவும் அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். பின்பு நக்ஷத்திராவும் அவரும் காதலிக்க துவங்கினார்கள். காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்தனர். நிச்சயதார்த்தத்தை கூட யாருக்கும் தெரியவிடாமல் மறைத்தனர். இரண்டு லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருக்கும் நக்ஷத்திராவிடம் தற்போது சுத்தமாக காசு கிடையாது. யாருடைய மனமும் நோகாமல் பார்த்து கொள்ளும் நக்ஷத்திராவிற்கா இந்த நிலைமை என ஸ்ரீ நிதி கதறி அழும்படியான வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்ரீ நிதி, நக்ஷத்திராவை பற்றி தவறான கருத்தை பரப்பி கொண்டிருப்பதாக ரசிகர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.