கோபி பற்றிய உண்மைகளை பாக்கியவிடம் கூறிய தனம் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் மூர்த்திக்கும் தனத்திற்கும் தெரிந்துவிடுகிறது. பாக்கியாவிற்கு கால் செய்து கோபியை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவிற்கு எப்போது தான் அனைத்து உண்மைகளும் தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழா முடிந்ததும் ராதிகாவுடன் கோபி நின்று நெருக்கமாக பேசிகொண்டிப்பதை பார்த்து மூர்த்தி சந்தேகப்படுகிறார். பின்பு, தனத்தையும் அழைத்துக்கொண்டு மூர்த்தி ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என மூர்த்தி ராதிகாவிடம் கேட்கிறார். ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து காட்டுகிறார்.
Exams Daily Mobile App Download
இதற்காக தான் கோபி வீட்டில் இப்படி நடந்து கொள்கிறாரா என மூர்த்திக்கு கோவம் வருகிறது. பின்பு, இவர் உங்களையும் அவரது குடும்பத்தாரையும் ஏமாற்றி கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை பார்த்துவிட்டு எதுவாக இருந்தாலும் முடிவு செய்யுங்கள் என கூறுகிறார். கோபி ராதிகாவின் வீட்டிற்கு வந்ததுமே கோபியிடம் உங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்கிறார். ஆனால், கோபி காட்ட முடியாது என கோவமாக கூறிவிடுகிறார். காட்டமுடியாது என்றால் வீட்டை விட்டு கிளம்புங்கள் என ராதிகா கூறிவிடுகிறார்.
தனத்திடம் பேசும் பாக்கியா, கோபியை வீட்டை விட்டு துரத்தும் ராதிகா – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!
எப்படியாவது போலியான குடும்பத்தை ஏற்பாடு செய்தாவது ராதிகாவை நம்ப வைத்துவிட வேண்டும் என்பதில் கோபி தெளிவாக இருக்கிறார். மறுபுறம் கோபியை பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்தும் கூட அமைதியாக இருந்துவிட்டோமே என தனம் கவலைப்படுகிறார். பின்பு பாக்கியாவின் வாழ்க்கையை காப்பாற்றியே தீர வேண்டும் என நினைத்து பாக்கியாவிற்கு கால் செய்து அனைத்து உண்மைகளையும் கூறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.