நாகசைதன்யா 2வது திருமணம் குறித்து கோபத்தில் ட்வீட் செய்த சமந்தா? குழப்பத்தில் ரசிகர்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மற்றும் தெலுங்கு பிரபலம் நாகசைதன்யாவின் விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு தற்போது நாகசைதன்யா எடுத்துள்ள முடிவால் கோபமாகிய சமந்தா இணையத்தில் பதிவு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.
சமந்தா ட்வீட்:
தமிழ் சினிமாத்துறையில் மாஸ்கோவின் காவேரி படம் மூலம் அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துக்கொண்டவர. 2010 இல் கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு காதல் திரைப்படமான ஏ மாயா சேசவே மூலம் சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் மலர, கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து!
குறிப்பாக இவர்களது கல்யாணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பலரும் பேசும் படியாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வந்தார். சமந்தா நடித்த முதல் திரைப்படம் சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் விருதையும், நந்தி விருதையும் பெற்றுத் தந்தது. இருவரும் திருமண வாழ்க்கையில் நான்கு வருட காலமாக ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்ய போவதாக இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்கள்.
ExamsDaily Mobile App Download
இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்று குழம்பி, அதற்கான விடை கிடைப்பதற்க்குள் நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாகவும், அந்த பெண் நடிகை இல்லை என்ற தகவலும் வெளியாகியது. ஆனால் இன்னும் இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. அதே போல் சமந்தா தரப்பிலிருந்தும் அவரது விவாகரத்து குறித்த காரணங்கள் ஏதும் வெளியிடாத நிலையில் தற்போது சமந்தா “என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள். என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்” எனவும், “அன்புக்கும் expiry date இருக்கலாம்” என்றும் இரண்டு டீவீட்டுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுருக்கிறார். இதனால் ரசிகர்கள் தலையும் புரியாமல் காலும் புரியாமல் குழம்பி உள்ளனர்.