தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை மறுநாள் செய்முறை தேர்வு தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் தான் பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! இன்றைய நிலவரம்!
மேலும் இந்த ஆண்டு குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்று உள்ளதால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத்தேர்வு தொடங்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் விரைவில் பாடங்களை முடிக்கும் படி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதை பற்றி பார்ப்போம்.
ExamsDaily Mobile App Download
இவர் கூறியதாவது, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாள் (ஏப்.25) முதல் 28ம் தேதி வரையும் மற்றும் 28ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை என 2 கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது. மேலும் செய்முறை தேர்வானது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும், கணக்குப்பதிவியல், ஆடைவடிவமைப்பியல், மின்னியல், தணிக்கையியல், நர்சிங் உள்ளிட்ட மாணவர்களுக்கும் அத்துடன் 10ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 2 மணி நேரம் கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.