“என் கனவு ஆசை எதிர்காலம் பற்றி நினைக்கவில்லை” – நடிகை சமந்தா ஓபன் டாக்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பள்ளி குழந்தைகளுக்கு படித்து தான் நான் முன்னுக்கு வந்துள்ளேன் என முன்னுதாரணமாக பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா:
தெலுங்கு, தமிழ், இந்தி, என பல மொழிகளில் வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் பானா காத்தாடி படம் மூலமாக அறிமுகமானவர். அவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அவருக்கு 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் 2 மாதங்களுக்கு முன் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ரீல் VS ரியல் மாமியாருக்கு இடையே நடைபெறும் போட்டி – ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்கள் வெளிவர இருக்கிறது. தனது காதல் வாழ்க்கை முடிந்ததை நினைத்து வருத்தத்தில் இருக்கும் அவர் தனது நண்பர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வந்துள்ளார். தொடர்ந்து அவர் சோகமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
13 ஆண்டு திருமண வாழ்க்கை, இரண்டாவது பெண் குழந்தை – நடிகை நீலிமாவின் பயணம்!
இந்நிலையில் அவர் பள்ளி குழந்தைகளுக்கு முன்னுதாரமாக சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். அதில் நான் சென்னை பொண்ணு, ஹைதராபாத் பொண்ணும் கூட, சின்ன வயதில் இருந்தே என் அம்மா அப்பா படிக்க சொல்வாங்க, படி படி என்று மட்டுமே சொல்லி வளர்த்தார்கள். அதனால் நானும் நன்றாக படித்தேன். அதனால் தான் இந்த நிலைமையில் இருக்கிறேன். சின்ன வயதில் படிப்பது மட்டுமே வேலையாக இருந்தது என் கனவு ஆசை எதிர்காலம் எதை பற்றியும் நினைக்கவில்லை என அவர் சொல்லி இருக்கிறார்.