நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி – ரசிகர்கள் அதிர்ச்சி! என்ன நடந்தது?
தமிழ் திரைத்துறையில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சில டெஸ்ட்களை எடுத்துள்ளார். இதற்காக தற்போது நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
நடிகை சமந்தா:
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் துறையில் இவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தமிழ் துறையில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து வருகிறார். தற்போது புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய பாடல் ஒன்று வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் ”ஓ சொல்றியா” பாடலிற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் செய்த சாதனை – சந்தியா & சரவணனுக்கு கேக் வெட்டி ஊட்டிய சிவகாமி!
நடிகை சமந்தா 2017 ஆம் ஆண்டு அவரது காதலர் நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில் இது குறித்து வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. தற்போது நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுடன் அனைத்து செய்திகளையும் பகிர்ந்து கொண்டு வந்தார்.
ரோஷினி நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ புதிய சீரியல் அறிமுகம்? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
தற்போது நடிகை சமந்தா சளி மற்றும் இருமல் காரணமாக சில டெஸ்ட்களை எடுத்துள்ளார். பிறகு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது சமந்தா நலமாக இருப்பதாகவும் வீட்டில் ஒய்வு எடுத்து கொண்டிருப்பதாகவும் அவருடைய மேனேஜர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.