விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் செய்த சாதனை – சந்தியா & சரவணனுக்கு கேக் வெட்டி ஊட்டிய சிவகாமி!
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் தற்போது 300 எபிசோடுகளை எட்டி இருக்கும் நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக மாமியார் சிவகாமி, சந்தியா மற்றும் சரவணனுக்கு கேக் வெட்டி ஊட்டிய காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜா ராணி
பல்வேறு ஏற்ற, இறக்கங்களுக்கு மத்தியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி 2’. விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற ‘ராஜா ராணி’ சீரியலின் 2ம் பாகமாக, புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி 2’ சீரியல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் துவங்கப்பட்டது. இந்த ‘ராஜா ராணி 2’ சீரியலின் கதைக்களம் ‘தியா அவுர் பாத்தி ஹம்’ என்ற ஹிந்தி சீரியலின் தமிழ் பதிப்பாகும்.
ரோஷினி நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ புதிய சீரியல் அறிமுகம்? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
என்றாலும் நடிகை ஆலியா மானஸா மற்றும் சித்துவின் நடிப்பிற்காக ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆரம்பத்தில் எக்கச்சக்கமான பார்வையாளர்களின் கவனம் பெற்று வந்தது. ஆனால் இந்த சீரியல், மாமியார் சிவகாமி, வில்லி அர்ச்சனா, சரவணன் மற்றும் சந்தியாவின் காதல் காட்சிகள் என பலவற்றிற்கு விமர்சனங்களை பெற்று வர காலப்போக்கில் ரசிகர்களுக்கு போரடிக்க துவங்கியது. இதற்கு மத்தியிலும் ‘ராஜா ராணி 2’ சீரியல் சத்தமே இல்லாமல் ஒரு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.
ரோஷினி நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ புதிய சீரியல் அறிமுகம்? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
அதாவது, ‘ராஜா ராணி 2’ சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்து சாதனை செய்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ‘ராஜா ராணி 2’ ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சீரியல் நடிகர், நடிகைகள், இயக்குனர், படப்பிடிப்பு குழுவினர் என அனைவரும் உற்சாகமாக கேக் வெட்டி சிறப்பித்துள்ளனர். அதுவும், மாமியார் சிவகாமி, சரவணன் மற்றும் சந்தியாவுக்கு அதாவது நடிகை ஆலியா மற்றும் நடிகர் சித்துவுக்கு கேக் வெட்டி ஊட்ட இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.