பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா உறுதியானதை உறுதி செய்துள்ள அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நடிகைக்கு கொரோனா:
மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக பாம்பு சட்டை என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான மகாநதி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
எகிப்து நாட்டு ராஜா, ராணியாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ பரினா & ரஹ்மான் – வைரலாகும் வீடியோ!
மேலும் இப்படம் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அதனை தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய மிஸ் இந்தியா, பென் குயின் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் என்று எப்போதும் கூறுவார். அவருடனும் பைரவா, சர்க்கார் உள்ளிட்ட 2 படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை எதிர்பாராத அளவு குறைத்துள்ளார்.
‘செம்பருத்தி’ ஷபானா முதல் ‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸா வரை – டாப் 10 சின்னத்திரை குடும்பங்கள்!
இது கீர்த்தி சுரேஷ் தானா என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு இவர் மாற்றம் உள்ளது. இதையடுத்து கீர்த்தி தொடர்ந்து போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை இவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கையுடன் இருந்த போதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதனால் கீர்த்தியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.