“வாழு வாழ விடு” – திரையுலகில் 30வது ஆண்டில் நடிகர் அஜித் அறிக்கை!
தமிழ் திரையுலகில் தனக்கொரு இடம் பிடித்து, தமிழ் மக்களால் தல என்ற தனி அடையாளம் பெற்ற நடிகர் அஜித் திரையுலகில் 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித்:
தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் அஜித், காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.
பாரதி கண்ணம்மா பரினா அதிரடி – ‘நான் இப்படி தான் குழந்தை பெற்றுக் கொள்வேன்’!
இந்நிலையில் அவர் திரை உலகிற்கு வந்து 29 ஆம் ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது 30வது ஆண்டு தொடங்கி உள்ளது. அவர் கடந்த 1992 ஆம் ஆண்டு “பிரேம புஸ்தகம்” என்ற தெலுங்கு படத்தில் முதன்முதலாக அறிமுகமான அவர், அதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். எந்த பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பினால் உயர்ந்த அவர், தற்போது திரையுலகில் 29 ஆண்டுகளை நிறைவு செய்து, தற்போது 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
TN Job “FB Group” Join Now
இதனால் தனது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்கள், விமர்சிப்பவர்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் ஒரு நாணையத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களிடம் இருந்து அன்பையும், விமர்சிப்பவர்களிடம் இருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து கருத்தையும் ஏற்கிறேன். ‘வாழு, வாழ விடு’ என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார் என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உள்ளது.