விப்ரோ நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் பணிநீக்கமா? ஷாக்கில் ஊழியர்கள்!
இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் விப்ரோ அரசு சேவைகளுக்கு என தனியாக இயங்கி வந்த Indian state-run enterprises (ISRE) துறையை பொது ஐடி சேவை துறையின் கீழ் இணைத்துள்ளது.
விப்ரோ நிறுவனம்
முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அரசு சேவைகளுக்கு என தனியாக இயங்கி வந்த Indian state-run enterprises (ISRE) துறையை பொது ஐடி சேவை துறையின் கீழ் இணைத்துள்ளது. இதற்கு காரணம் ISRE துறை 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 20.18 சதவீத வருமான இழப்பை எதிர்கொண்டது தான். இதனால் தனி பிரிவாக இயங்கி வந்த ISRE துறை தற்போது பொது ஐடி சேவை பிரிவின் கீழ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
நீங்களும் அரசு ஊழியராகலாம் – புதிய வாய்ப்பு.. அசத்தல் சான்ஸ்!!
இந்த நிறுவனம் ஐடி சேவைகள், ஐடி ப்ராடெக்ஸ், ISRE என 3 பிரிவுகளில் இயங்கி வந்தது. இதில், ISRE துறையில் அரசு சார்ந்த சேவைகளில் ஓவர்டியூ தொகையை வசூலிப்பதில் தாமதம் இருப்பதாலும், பெரிய அரசு திட்டங்களை கையாளுவதில் இருந்து விலகுவது மட்டும் அல்லாமல் சில சேவைகளை மூடவும் முடிவு செய்து இருக்கிறது.
அதனால் ஊழியர்களின் வேலை பறிபோகுமா என அச்சத்தில் இருப்பவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த பிரிவு ஊழியர்கள் பிற ஐடி சர்வீஸ் துறைக்கு மாற்றப்படலாம் என்பதால் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download