Accenture நிறுவனத்தில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் 2022 – தகுதி உட்பட முழு விபரங்களுடன்!
ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி விண்ணப்பித்து பயன் பெறவும்.
ஆக்சென்ச்சர் நிறுவனம்:
ஆக்சென்ச்சர் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தகுதியான வேலையாட்களை பணியில் அமர்த்தி வருகின்றனர். இந்தியாவில் தகுதியும் அனுபவமும் உள்ள புதிய விண்ணப்பதாரர்களை பணியமர்த்த ஆக்சென்ச்சர் நிறுவனம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதன்படி ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது ஆக்சென்ச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தலைமை செயலகத்தில் மட்டுமே 3,00,000 க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வர தேவையில்லை!
மேலும், இந்த நிதியாண்டில் மட்டுமே ஆக்சென்ச்சர் நிறுவனம் 1.62 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமே 70,000 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. உலகம் முழுவதும் ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் 6,99,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமே ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளதாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, குருகிராம் போன்ற இடங்களில் அதிகமான வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
2020,2021 ஆம் ஆண்டு B.E.,B.Tech ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பயின்றவர்கள் இந்த ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சேர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020,2021 ஆம் ஆண்டு B.Sc., BCA, B.Com, BBA, அல்லது BA ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம் மற்றும் 2020, 2021 ஆம் ஆண்டு M.E./MCA மற்றும் MSc (CS/IT) ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://indiacampus.accenture.