தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வர தேவையில்லை!
1முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி நிறைவடைகிறது. இருப்பினும் ஆசிரியர்கள் 20ஆம் தேதி வரை பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் முடித்துவிட்டால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவை இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி ஆசிரியர்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் மாணவர்களுக்கு தற்போது பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதியிலிருந்து பொதுத் தேர்வு துவங்கி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது. ஆனாலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 1ஆம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. நாளையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி வரை இந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ONGC நிறுவனத்தில் உதவித் தொகையுடன் வேலை – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
இருப்பினும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதாவது 1முதல் 9 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தம் செய்வதற்காக கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் மே 16, 17 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியை முடித்து விட்டால் ஆசிரியர்கள் அதற்கு பிறகு பள்ளிக்கு வர தேவை இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.