தொடர்ந்து விலை ஏற்றத்தில் ஆவின் பொருட்கள் – அதிரடியாக நெய் விலை உயர்வு!!
ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலையும் தடாலடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
ஆவின் விலை உயர்வு:
தமிழக அரசு விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன் கருதி ஆவின் நிறுவனத்திற்கான பாலை நேரடியாக அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறது. இதற்கான சங்கங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். அதன்படி,பால் கொள்முதல் விலையை உயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அரசு பசும் பால் 1 லிட்டர் ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் லிட்டருக்கு ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் வழங்கியது.
Exams Daily Mobile App Download
இதனால் பாக்கெட் பாலின் விலையானது லிட்டருக்கு ரூ.12 என கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.590 ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரைலிட்டர் ஆவின் நெய் ரூ.290 ல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலையானது டிசம்பர் 16ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் பொருட்கள் விலை உயர்வினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.