பொங்கல் பரிசு 2023: வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரம் – திணறும் அதிகாரிகள்!!
தமிழகத்தில் தற்போது குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் 33 ஆயிரம் பேரின் விவரங்களைப் பெற முடியவில்லை என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவுத் துறை
தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரூ.1000 ரொக்க பரிசு வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுத் துறையினர் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் கோவையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இப்பணியை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரி கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் இருக்கின்றனர். இதில் 3,100 பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தது. தற்போது இவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விலை ஏற்றத்தில் ஆவின் பொருட்கள் – அதிரடியாக நெய் விலை உயர்வு!!
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இருந்தனர். தற்போது இவர்களில் 56 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களை தொடர்பு கொண்டு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதி 33 ஆயிரம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தொடர்பு கொண்டாலும் தங்களின் விவரங்களை கூற மறுக்கின்றனர் என வருத்தம் தெரிவித்தார். அதனால் பொதுமக்கள் அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.