திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு – அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் மார்கழி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் வைகுண்ட ஏகதேசி காரணமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைத்து இருப்பதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சிறப்பு தரிசன டிக்கெட்:
மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் பெருமாள் கோவில்கள் அனைத்திலும் வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிலையில் இன்று முதல் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் விழாக்கள் நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் புதியதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை – ரூ.115 கோடி ஒதுக்கீடு!!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கான முன்னேற்பாடுகளை இன்று ஆய்வு செய்தார். அதன் பின் பேசிய அவர் வைகுண்ட ஏகாதசிக்காக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைக்கப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே இந்த கோவிலில் டிக்கெட் விலை ரூ. 200 இருந்த நிலையில் தற்போது ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.