ஆவின் மாதாந்திர அட்டை – ரேஷன் கார்டு இணைப்பு – அரசின் முக்கிய உத்தரவு!
தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மாதாந்திர அட்டை முறையில் வாடிக்கையாளர்களுக்கு பால் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவின் மாதாந்திர அட்டை:
தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பசும் பாலை கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. அது மட்டுமல்ல பால் சார்ந்த பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டின் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு ஏழை, எளிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ஆவின் மாதாந்திர அட்டை தாரர்களுக்கு மட்டும் பால் விலை மாற்றமின்றி பழைய விலைக்கே வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வெளியில் வணிக ரீதியாக விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
நாளை & டிச. 4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை தடுக்கும் வகையில் ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மாதாந்திர அட்டை உடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக ஆவின் அட்டை – ரேஷன் கார்டு இணைக்கும் பணி நடந்து வருகிறது.