நாளை & டிச. 4ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
டாஸ்மாக் மூடல்
திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துப்பேட்டையில் இருக்கும் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இவ்விழா தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும். அதனால் 14 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக சந்தனக்கூடு நிகழ்வானது மிகவும் பிரபலமானது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நாளை தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் சந்தனக்கூடு நிகழ்வானது டிசம்பர் 4ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இத்தினத்தை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவிப்பு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இவ்விழாவை கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து நாளையும், டிசம்பர் 4ம் தேதியும் முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.