பிப்.22 முதல் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் – புதிய கார்டு பெற கட்டணம் கிடையாது!
தமிழகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக பிப்ரவரி 22 முதல் சிறப்பு ஆதார் முகாம் நடைபெறவுள்ளது. மேலும் பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மாற்றுதல், போன்றவற்றை இந்த முகாமில் மாற்றி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்:
இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அட்டை ஆதார் அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. நமது அனைத்து வேலைகளுக்கும் உதவும் ஆதார் கார்டை எல்லா நேரங்களிலும் நம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். தற்போதைய கால கட்டத்தில் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அவசியமாகிறது. இந்த நிலையில் ஆதாரில் உள்ள விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியமாகும்.
தமிழகத்தில் அமலாகும் 3 ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய உத்தரவு! முழு விபரம் இதோ!
ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் அதனை மாற்றும் வசதியை UIDAI அமைப்பு வழங்குகிறது. முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகவே மாற்றலாம். கைரேகை, புகைப்படம் போன்றவற்றை மாற்ற கட்டாயம் ஆதார் சேவை மையம் செல்ல வேண்டும். இந்த நிலையில் இந்திய அஞ்சல் துறை சார்பாக தமிழகத்தில் பிப்ரவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு ஆதார் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி, மொபைல் எண் மாற்றுதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு! மார்ச் 31 கடைசி நாள்!
இந்த முகாமில் புதிதாக ஆதார் கார்டும் இலவசமாக எடுக்கப்படும் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள வருபவர்கள் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அசல் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.