SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு! மார்ச் 31 கடைசி நாள்!
இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பான் ஆதார் இணைப்பு
இந்தியாவில் பொது மக்களுக்கு தேவையான வங்கி சேவைகளை அளிப்பதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. அத்துடன் நாட்டில் இயங்கி வரும் முன்னணி வங்கி நிறுவனங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியும் ஒன்று. இந்த வங்கியில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதில் செக் கிளியரன்ஸ், கிரெடிட் கார்டு கட்டணங்கள், பண பரிமாற்றம் உள்ளிட்டவை சேவைகளுக்கு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய விதிமுறையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது
ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு – வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!
இதில் தெரிவித்தாவது, வாடிக்கையாளர்கள் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டியது அவசியமானது. அவ்வாறு இணைக்கவில்லையெனில் வாடிக்கையாளர்களின் வங்கி சேவை நிறுத்தப்படும். முன்னதாக பான் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது இதனை மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
தற்போது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. இதற்கு முதலாவதாக https://www.
2. இதில் இடது பக்கத்தில் உள்ள Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. இதையடுத்து ஒரு புதிய பக்கம் திரையில் காண்பிக்கப்படும். இதில் பான், ஆதார் எண் அத்துடன் மேலும் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுக்க வேண்டும்.
4. தற்போது ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டும் இருந்தால் ‘I have only year of birth in aadhaar card’ என்ற பாக்ஸை டிக் செய்ய வேண்டும்.
5. இதையடுத்து கேப்ட்சா குறியீடு மற்றும் OTP எண்ணை சரிபார்க்க வேண்டும்.
6. இறுதியாக Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைக்கப்பட்டது.