ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – ஆதார் இணைப்பு! ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

0
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - ஆதார் இணைப்பு! ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் - ஆதார் இணைப்பு! ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – ஆதார் இணைப்பு! ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

இந்தியாவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன. தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் கடந்த 2016ம் ஆண்டு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். அதாவது கார்டுதாரர்கள் தங்களின் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்றாலும் அல்லது வெளி மாநிலத்திற்கு சென்றாலும் தங்களின் கைரேகை பதிவை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை பெற முடியும். இத்திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதன் மூலமாக சுமார் 80 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்துள்ளனர்.

ஏப்ரல் 4 தொடங்கி காலை 7.30 மணிமுதல் 11.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இத்திட்டத்தில் இணைவதற்கு தங்களின் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அத்துடன் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருகிற ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரேஷன் கார்டு நகல், ஒரிஜினல் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படுகிறது.

தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. இதற்கு  முதலாவதாக uidai.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, இதில் ‘start now’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

2. பின்பு தங்களின் பெயர், முகவரி, மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட வேண்டும்.

3. அடுத்ததாக ‘ration card benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

4. இதையடுத்து ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

5. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். இந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது தங்களின் ஆதார் எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!