குடித்துவிட்டு மூர்த்தியிடம் தகராறு செய்யும் ஜீவா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வாரம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை எதுவும் கொடுக்காமல் இருப்பதால் அவர் வருத்தமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் குடித்துவிட்டு வந்து மூர்த்தியிடம் ரகளை செய்வது போல அடுத்த வார எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பதால் அவரது மனம் வருத்தப்படுகிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்பதால் தனமும் மூர்த்தியும் புது வீடு திட்டத்தை தள்ளி வைக்கின்றனர். முல்லைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்கின்றனர். ஆனால் இந்த முடிவு மீனாவிற்கு பிடிக்கவில்லை. இன்னும் சில வருடங்கள் கழித்து முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்கலாம், இப்போதைக்கு வீடு தான முக்கியம் என மீனா பேசுகிறார்.
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி “செந்தூரப்பூவே” சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இப்படி கதை சென்று கொண்டிருக்க மறுபக்கம் ஜீவாவை குடும்பத்தில் இருந்து பிரிக்க ஜனார்த்தனன் பல வேலைகளை செய்கிறார். கடை கணக்கு வழக்குகளை ஜீவா பெயரில் எழுதி வைக்க முடிவு செய்கிறார். மேலும் மூர்த்திக்கு போன் செய்து மாப்பிள்ளை எப்போதும் உங்க கடை பற்றியே நினைப்பதால் நான் நிம்மதியாக இல்லை என சொல்ல மூர்த்தி நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் ஜீவாவிடம் இனிமேல் வராதே என சொல்ல ஜீவா வருத்தப்படுகிறார்.
இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா ஜீவாவை திருச்சிக்கு கூப்பிட ஜீவா அண்ணன் அண்ணியிடம் சொல்லிவிட்டு செல்கிறேன் என சொல்கிறார். ஆனால் மீனாவின் அப்பா நீங்க தான் அண்ணனை நினைக்கிறீர்கள் ஆனால் அவர்கள் உங்களுக்கு போன் கூட செய்யவில்லை என சொல்கிறார். அதனால் ஜீவா வருத்தப்படுகிறார். அடுத்து வரப் போகும் எபிசோடு குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவா குடித்துவிட்டு வந்து மூர்த்தியிடம் சண்டை போடுகிறார். என்னை கடை பக்கமே விடாமல் இருந்தால் என்ன அர்த்தம் என ஜீவா குடித்துவிட்டு பேச கதிர் அவரை அழைத்தும் வராமல் இருக்கிறார். பின் கஸ்தூரி முல்லைக்கு குழந்தை பிறக்க கோவிலுக்கு போகலாம் என சொல்கிறார்.