விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி “செந்தூரப்பூவே” சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், சீரியல்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல் ஒன்று விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முடிவுக்கு வரும் சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியல்கள் அனைத்துமே ரசிகர்களின் மனம் கவர்ந்து இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ரஞ்சித் ஹீரோவாக நடித்துவரும் செந்தூரப் பூவே விஜய் டிவியில் ஹிட் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் குழந்தைகளை மையமாக வைத்து கதை முதலில் தொடங்கிய நிலையில் பின் கணவன் மனைவி காதல், அமானுஷ்யம் என காட்டப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்ததன் காரணமாக இந்த சீரியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் பின் புது பொலிவுடன் இந்த கதை தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீரியல் TRPயில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் பல சீரியலில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது “செந்தூர பூவே” சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனைத்து திருப்பங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதனால் 300 எபிசோட்களை தாண்டியுள்ள இந்த சீரியல் தற்போது முடிய இருக்கிறது.
இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். பிரபல நடிகர் ரஞ்சித் சீரியலில் முதன்முறையாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். சீக்கிரமாக இந்த சீரியல் முடியவடைய இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருக்கின்றனர். விறுவிறுப்பான திருப்பங்களோடு சென்ற இந்த சீரியல் இவ்வளவு சீக்கரம் முடியும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் இதில் நடிகை பிரியா ராமன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.