ஆதார் அப்டேட் கட்டுப்பாடுகள் – எதற்கெல்லாம் தெரியுமா? விவரம் இதோ!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நாம் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ விவரங்களை அப்டேட் செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில விவரங்களை ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அது என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
ஆதார் அப்டேட்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஆதார் எண் வழங்கப்படுகிறது. இது பால் ஆதார் எனப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தனிப்பட்ட வேலைகள் முதல் அரசு சம்மந்தப்பட்ட வேலைகள் வரை அனைத்துக்கும் ஆதார் அட்டை கேட்கப்படுகிறது. அதனால் ஆதாரில் தேவையான விவரங்களை அப்டேட் செய்து சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது ஆன்லைன் வாயிலாகவே, ஆதார் சேவை மையங்கள், பொது சேவை மையங்கள் வாயிலாக ஆதாரை அப்டேட் செய்யலாம்.
Exams Daily Mobile App Download
இருப்பினும் ஆதாரில் சில அப்டேட்டுகளை செய்ய கட்டுப்பாடுகள் உள்ளது. அதாவது ஆதார் கார்டில் உங்களுடைய பெயரை இரண்டு முறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும். அதே போல பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை ஒரே ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும். அதனால் நீங்கள் மேற்கண்ட விவரங்களை முதல் முறை அப்டேட் செய்யும் போது கவனத்துடன் தவறில்லாமல் செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து முகவரி, தொலைபேசி எண், புகைப்படம் போன்றவற்றை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
Post Office ‘இந்த’ திட்டத்தில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – முழு விபரம் இதோ!
இவ்வாறு நீங்கள் விவரங்களை அப்டேட் செய்யும் போது அதற்கு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பொதுச் சேவை மையங்களில் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆதாரை வைத்து பல வித மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் பாதுகாப்புடைய மாஸ்க் ஆதாரை பயன்படுத்தும் படி UIDAI அறிவுறுத்தி வருகிறது. மேலும் தேவையின்றி ஆதார் எண், OTP போன்ற விவரங்களை யாருடனும் பகிர கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்