ஆதார் அட்டையில் இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் கார்டு அப்டேட் செய்யும் வசதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இனி மொபைல் நம்பர், புகைப்பட மாற்றம், பெயர் போன்ற முக்கியமான அப்டேட்டுகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பொது சேவை மையங்கள் மட்டுமல்லாமல், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் நீங்கள் அப்டேட் செய்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆதார் கார்டில் இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 14 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
UPSC வேலைவாய்ப்பு 2024 – 76 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !
தற்போது மத்திய அரசானது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பிக்க மற்றும் திருத்தங்கள் செய்ய விடுக்கப்பட்ட கால அவகாசமானது ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனரகள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க தேவையில்லை. முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம்.