பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
காலிப்பணியிடங்கள்:
மிசோரம் மாநிலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வன்லால்த்லானா அவர்கள் நேற்று மாநிலத்தின் சட்டப்பேரவையில் பேசி உள்ளார். அப்போது மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்கள் குறித்தான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2991 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது உள்ள ஆட்சேர்ப்பு விதிகளின்படி காலியான பதவி இடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42.5% உயர்வு – மாஸ் காட்டும் மாநில அரசு!
குறிப்பாக தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை அரசு தொடங்க உள்ளதாகவும், முதலில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.