பள்ளிகளுக்கு அக்.26 வரை விடுமுறை – மாநில அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு!
தசரா பண்டிகைக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடப்பட்டிருந்த விடுமுறைகள் தற்போது அக்டோபர் 26ம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
விடுமுறை நீட்டிப்பு:
தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக முன்னதாக செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு அடுத்து 24ம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகைக்கும் தொடர் விடுமுறைகள் அளிக்க வேண்டி உள்ளது. இடையில் சில நாட்களுக்கு மட்டும் மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளதால், தீபாவளி வரை தொடர் விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர், இதன்படி, தெலுங்கானா அரசு தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மேலும் நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தெலுங்கானாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 26 வரை தசரா விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், திட்டமிட்டபடி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்கள் மட்டுமே அக்டோபர் 26ம் தேதி மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும் என்றும், அக்டோபர் 26-ம் தேதி வரை வகுப்புகள் தொடங்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்கு , இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என்றும் தெலுங்கானா மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்