தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை:

தமிழக அரசு வேலை வாய்பற்றவர்களுக்கு உதவித்தொகை அளிக்க திட்டமிட்டது. அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். வேலைவாய்ப்பு பதிவை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தும் 5 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில் 30.09.2022 அன்றைய தேதியில் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்து 5 வருடங்கள் முடிவடைந்து வேலை கிடைக்காமல் உள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இவர்கள் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்திருத்தல் அவசியம். அதே போல மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்து 1 ஆண்டு முடிவடைந்திருந்தாலே போதுமானது. எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி ‘மின்தடை’ – எந்தெந்த பகுதிகள் தெரியுமா? முழு List இதோ!!

Exams Daily Mobile App Download

இவர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் பொது பிரிவினர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1000 உதவித்தொகையாக காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகள் உடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!