தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் தற்கொலை சம்பவம் அடிக்கடி அரங்கேறி வரும் நிலையில் மாணவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை சார்ந்த விழிப்புணர்வு முகாம் நேற்று (ஜூலை 28) நடைபெற்றது. இந்நிலையில் அதில் முதல்வர் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உளவியல் ஆலோசனை திட்டம்:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பள்ளிகள் செயல்படாத நிலையில், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர். அதனால் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Exams Daily Mobile App Download
அதில் சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பேசுகையில், கொரோனாவில் இருந்து தற்போது தான் மீண்டு வந்த நிலையில் உடல்சோர்வு இருக்கிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும் போது உற்சாகமாக இருக்கிறது என தெரிவித்தார். இந்நிலையில் பல மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருகின்றனர்.
ரயில்வே பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – சிறப்பு ரயில் சேவைகள் நவம்பர் வரை நீட்டிப்பு!
காலை உணவை தவிர்க்க கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனை மனதில் வைத்து கொண்டு தான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றுவிட்டால் படிப்பு தானாகவே வந்துவிடும். அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகத்தான் இந்த ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது. மனமும் உடலும் சரியாக இருந்தால் அனைத்து நலன்களும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.