ரயில்வே பயணிகளுக்கான ஹாப்பி நியூஸ் – சிறப்பு ரயில் சேவைகள் நவம்பர் வரை நீட்டிப்பு!
எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரயில் சேவைகளின் கால அவகாசம் நவம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான கட்டண விவரங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவை:
பெரும்பான்மையான மக்கள் அதிக தூரம் பயணம் செய்யும் போது ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். அதிலும் பண்டிகை தினங்கள் என்றால் ரயிலில் பயணிகள் அலைமோதி கொண்டிருப்பர். தற்போது காரைக்குடி, விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியே இயக்கப்பட்டு வரும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்வதால் எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரைக்கும் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
எப்போதுமே இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு எர்ணாகுளத்தை வந்தடைகிறது. அதே போல வேளாங்கண்ணிக்கு செல்லும் ரயில் தென்காசிக்கு இரவு 8.13 மணிக்கு வந்தடைந்து 8.15 மணிக்கு புறப்பட்டுவிடுகிறது.
தமிழகத்தின் குறிப்பிட்ட ‘இந்த’ மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
மேலும், எர்ணாகுளம் செல்லும் ரயில் தென்காசிக்கு காலை 3.50 மணிக்கு வந்து 3.52 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிடுகிறது. இந்த ரயில் சேவைகள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரைக்கும் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நிர்வாகம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்த ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.