சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் – அச்சத்தில் பொதுமக்கள்!
சீனாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது புதிய வகை வைரஸ் தொற்று உருவாகியுள்ளது. இந்த வைரஸ் சுமார் 35 பேருக்கு பரவி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து சீன மருத்துவ நிபுணர்கள் புதிய வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பரவல்
சீனாவின் உஹான் நகரில் இருந்து கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிக மக்கள் தொகையை கொண்ட சீனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் வேகமெடுத்து பரவியது. இதனை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு பல்வேறு அறிவுறுத்தல்களை நாடுகளுக்கு வழங்கியது. இதன் பேரில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதித்தது.
Exams Daily Mobile App Download
அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்றும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நோயானது இத்தாலி, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வருவதாக தகவல் வந்துள்ளது. அத்தனையோ தொடர்ந்து தற்போது புதிய தாக்குதலாக சீனாவில் லங்யா ஹெனிபா வைரஸ் பரவி வருகிறது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – புகாரளிப்பது எப்படி?
தற்போது ஷாங்டாங், ஹெனான் ஆகிய தெற்கு மாகாணங்களில் 35 பேர் லங்யா ஹெனிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எலி போன்ற கொறிக்கும் விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதாக கூறுகின்றனர். இதனையடுத்து சீன மருத்துவ நிபுணர்கள் லங்யா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளை தற்போது தொடங்கி உள்ளனர். தற்போது உருவாகியுள்ள வைரஸும் மனிதர்களை கொள்ளும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.