EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – புகாரளிப்பது எப்படி?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) தொகை வந்தடையாவிட்டால் எப்படி புகாரளிப்பது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EPFO கணக்கு:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டம் ஓய்வூதியதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை வழங்கி வருகிறது. மேலும், PF பலன்களை பெற வேண்டும் என்று விரும்பினால் உறுப்பினர் கட்டாயமாக EPFO கணக்குடன் நாமினிகளை இணைக்க வேண்டும். மேலும், உறுப்பினரின் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகை 20 நாட்களுக்குள் அவரின் கணக்கிற்கு சென்றடையாவிட்டால் பொறுப்பான பிராந்திய PF ஆணையரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று ‘பணியாளர்கள்’ என்கிற பிரிவில் உள்ள EPFIGMS என்கிற அம்சத்தின் மூலமாக புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, PF தொகை குறித்து புகாரளிக்க http://epfigms.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திலும் புகாரளிக்கலாம் அல்லது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆப்கே நிகத் திட்டத்தின் மூலமாகவும் கமிஷனர் முன்னிலையில் புகாரளிக்கலாம்.
தமிழகத்தில் மாநில திட்ட அலுவலர் பணி – 26ம் தேதி கடைசி நாள்
மேலும், வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்கள் EPF கணக்கு தொடர்பான புகாரை EPFiGMS போர்ட்டலில் பதிவு செய்யலாம் அல்லது UMAG செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், EPF உறுப்பினர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து விலகாத வரைக்கும் எந்த நேரத்திலும் PF தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். ஒரு வேளை வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து உறுப்பினர் விலகிவிட்டால் இரண்டு மாதங்கள் காத்திருந்து PF தொகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும், EPFO உறுப்பினர் இறந்துவிட்டால் மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.