கள்ளக்குறிச்சி விவகாரத்தில் புதிய திருப்பம் – பிரேத பரிசோதனை பற்றிய அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் முதல் பரிசோதனையில் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிரேத பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புதிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்றம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. பள்ளியின் தரப்பில் மாணவி தற்கொலை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை என எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு நிதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதல் பிரேத பரிசோதனையில் சடலத்தில் காயங்கள் இருப்பதை அறிந்த போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
Exams Daily Mobile App Download
இந்த கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் கலவரக்காரர்களை கைது செய்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது அதனால் மீண்டும் உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். உயர்நீதிமன்றமும் அவர்கள் கொடுத்த மனுவை ஏற்று இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து மாணவியின் சிசிடிவி கட்சிகளும் வைரலாக பரவியது.
ரேஷன் கடைகளில் ஊழலை தடுக்க நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு
தற்போது இரண்டாவது பிரேத பரிசோதனையில் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் தரப்பில் பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால், இதுபோன்று ஒவ்வொரு முறையும் பிரச்சனையை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.