தமிழக பள்ளிகளில் புதியதோர் அம்சம் – உதயநிதி ஸ்டாலின் தொடக்கம்!
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 5 அரசுப் பள்ளிகளில், 3டி தொழில்நுட்பத்தில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மெய்நிகர் ஆய்வகத்தின் மூலம் கற்பிக்கும் வசதியை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர்.
மெய்நிகர் ஆய்வகம்:
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 5 அரசு பள்ளிகளில் மெய்நிகர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன இதற்கான தொடக்க நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த மெய்நிகர் வகுப்புகளில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட படங்களை மாணவர்கள் கருவியை பொருத்திக் கொண்டு பார்க்க முடியும். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெட்டா கல்வி புதிய முயற்சியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ரான் பிஏ.2.75 வைரஸ்? கவுன்சில் விளக்கம்!
உதயநிதி இளைஞரணி தலைவராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிந்து 4ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. அவர் 4 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார். மேலும் ஸ்மார்ட் ஆய்வகங்களில் படிக்கும் பொருட்களை தொட்டு பார்க்க முடியும். ஆனால் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனுபவமாக, நேரடியாக பார்க்க முடியும். தமிழ்நாட்டில் 38 ஆயிரம் பள்ளிகள் இருக்கிறது. அங்கு ஸ்டெம் லேப் ஆய்வகம் தொடங்கவுள்ளோம் எனத் தெரிவித்தார். இதையடுத்து விழாவில் சிறப்புரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு மாதம் முன்பு 3டி விர்ச்சுவல் ரியாலிட்டி குறித்து காண்பித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை பார்த்து அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறினேன். அதன் பின்னர் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி கொடுத்து வைத்த தொகுதி எனக் கூறினார். ஆனால் அதுவல்ல. நான் தான் கொடுத்து வைத்தவன், மாணவர்களுக்கு கல்வி திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என கருணாநிதி கூறினார். பெண்களுக்கும், மாணவர்களுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க பாடுபட்டு வருகிறோம். விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க 5 பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பயிற்சியை ஆசிரியர்களுக்கு வழங்கி , பின்னர் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர் என்று கூறினார்.