தமிழகத்தில் மதுபான பாட்டில் திரும்ப பெரும் திட்டம் – அக்.11 நீதிமன்ற உத்தரவு!
தமிழகத்தில் அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மீண்டும் காலியான பாட்டில்களை பெற்றுக் கொள்வது தொடர்பான வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பான தீர்ப்பு வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான பாட்டில்கள்:
தமிழகத்தில் முற்றிலும் மது ஒழிப்பு நடக்க வேண்டும் என்பது பல காலமாக பல தரப்பினராலும் கோரிக்கையாக வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், டாஸ்மாக் மதுபான கடைகளை அரசே நடத்தி வருகிறது. அதன் மூலம் அதிக அளவிலான வருவாய் ஈட்டப்படுகிறது. இதனால், முற்றிலும் மது ஒழிப்பிற்கு முன்னதாக கிடைக்கும் நேரத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்மூலம் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க வேண்டும்.
2022 நிதியாண்டில் புதிதாக 80 லட்சம் வேலைகள் உருவாக்கம் – வெளியான அறிக்கை!
அதேபோல், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி வருகிறது. மேலும், புதிதாக டாஸ்மாக் கடைகளை தொடங்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றும், இட மாறுதல் அளிக்கப்படும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா தளங்கள் மற்றும் நீர்நிலைகளில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்தும், விட்டும் செல்கின்றனர். இவை அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
Exams Daily Mobile App Download
இதனால் இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. முன்னதாக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை லேபிளுடன் வழங்கினால் ரூ.10 வழங்கும் திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் காலிபாட்டில்களை வழங்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வரும் அக்டோபர் 11ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளில் காலியான மதுபாட்டில்களை திரும்ப பெறுவது குறித்து உத்தரவிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்