2022 நிதியாண்டில் புதிதாக 80 லட்சம் வேலைகள் உருவாக்கம் – வெளியான அறிக்கை!
தற்போதைய நிதியாண்டில் நாட்டில் புதிதாக 80 லட்சம் பணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக BetterPlace அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் நாட்டில் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள்:
நாட்டின் முன்னணி பணியாளர் மேலாண்மைக்கான முன்னணி தொழில்நுட்ப தளமான BetterPlace, ஃப்ரண்ட்லைன் இன்டெக்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் சுமார் 80 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன. ஜூன் 2020 முதல் ஜூலை 2022 வரை பிளாட்ஃபார்ம் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையின்படி, முன்னணி ஊழியர்களுக்கான தேவைக்கு ஈ-காமர்ஸ் துறையானது அதிக பங்களிப்பை அளித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர், சில்லறை வணிகம் அதிகரித்து வருவதால், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், விநியோக மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகளில் வேலைகள் வேகமாக அதிகரித்து வருவதால், தொழிலாளர்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை சில ஆண்டுகளில் 50 மில்லியனாக உயரும் என்று BetterPlace இன் இணை நிறுவனர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி பிரவின் அகர்வாலா கூறியுள்ளார்.
சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ் – உயரும் வட்டி! வெளியான தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்கு தேவையைக் கொண்டுள்ளன. மொத்த தொழிலாளர்களில் 60% இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில், அதிகமான பெண்களை முன்னணி பணியாளர்களாக கொண்டு வருவதையும், இந்த கூட்டுறவின் வருவாய் திறனை 30% அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்