சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயம் – காலக்கெடு நீட்டிப்பு!!
மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சுங்கச்சாவடிகளில் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் முறையில் பணம் செலுத்துவது ஜனவரி 1 2021 முதல் கட்டாயம் என அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பாஸ்டேக் காலக்கெடு:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் கால விரயம் மற்றும் எரிபொருள் வீணாகிறது. இதனை தடுக்கும் பொருட்டு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை FASTag பரிவர்த்தனைகளின் பங்கு 75-80% ஆக உள்ளது. மேலும் ஜனவரி 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் இம்முறை கட்டாயம் என மத்திய அமைச்சகம் அறிவித்து இருந்தது.
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!
இதனை மீறினால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பாஸ்டேக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருப்பது கடினம் எனவும் கூறி வந்தனர். இந்நிலையில் பாஸ்டேக் கட்டாயத்திற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
இஸ்ரோ தலைவர் கே.சிவன் பதவிக்காலம் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!!
அதன்படி பிப்ரவரி 15 முதல் 100% பணமில்லா கட்டண வசூலை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அதுவரை பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் எனவும், இரு மடங்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிய வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாமல் அதெற்கென ஒதுக்கப்பட்ட ‘தனி பாதைகளில்’ நுழையும் எந்தவொரு வாகனமும் சாதாரண கட்டண கட்டணத்தை விட இருமடங்கு செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்