ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் அட்டவணையின்படி, மே 1 ஆம் தேதி இந்தியாவில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
வங்கி விடுமுறை
இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் அட்டவணையின்படி விடுமுறை குறித்த அறிவிப்பை பின்பற்றும். பொதுவாக வங்கிகள் ஞாயிறு மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மூடப்படும். அதன் படி மே மாதத்தில் வங்கிகள் 14 நாட்கள் விடுமுறை ஆகும். மேலும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மே 1ஆம் தேதி பின்வரும் மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். அன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாராஷ்டிரா தினம், மகாராஷ்டிரா டின் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தான் இந்த மாநிலம் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதனை நினைவுகூரும் வகையில் வங்கிகள் விடுமுறை ஆகும். அது தவிர மே மாத விடுமுறை நாட்கள் இதோ
ஆரம்பத்திலேயே மாதம் ரூ.216600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – மிஸ்பண்ணிடாதீங்க!
- மே 7- மக்களவை பொதுத் தேர்தல் என்பதால் குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா போன்ற இடங்களில் விடுமுறை
- மே 8- ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் அதனால் வங்காளத்தில் வங்கிகள் மூடப்படும்.
- மே 10- பசவ ஜெயந்தி/அக்ஷய திரிதியா கர்நாடகாவில் வங்கிகள் மூடப்படும்.
- மே 13- மக்களவை பொதுத் தேர்தல் என்பதால் ஸ்ரீநகர் விடுமுறை.
- மே 16- மாநில நாள் என்பதால் சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
- மே 20- மக்களவை பொதுத் தேர்தல் என்பதால் மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்படும்.
- மே 23-புத்த பூர்ணிமா என்பதால் திரிபுரா, மிசோரம், மத்தியப் பிரதேசம், சண்டிகர், உத்தரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு, லக்னோ, வங்காளம், புது தில்லி, சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம், ஸ்ரீநகர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
- மே 25- நஸ்ருல் ஜெயந்தி/லோக்சபா பொதுத் தேர்தல் என்பதால் ஒரிசா, திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.